Posts

Showing posts with the label மொழிமாற்றம்

ஆவநாழி மென்னிதழில் வெளியான ஓவியர் ஜீவா அவர்களின் பிஜய் பிஸ்வால் உடனான நேர்காணல்
ஆங்கில உரையாடலின் தமிழ் வடிவம் எனது

Image
ஈர ப்ளாட்ஃபார்ம்களில் பிரதிபலிக்கும் பேரோவியங்கள் நேர்காணல் - ஓவியர் ஜீவா   தமிழாக்கம் - அரவிந்த் வடசேரி    ஒடிசாவைச் சேர்ந்தவர் பிஜய் பிஸ்வால். இந்தியா மட்டுமல்லாது உலகம் நன்கறிந்த ஓவியர். தன் இந்திய ரயில்வே பணியின் தாக்கத்தில் ஈர ரயில்வே ப்ளாட்ஃபாரங்களை பெருமளவில் வரைந்து பெரும் புகழ் பெற்றவர். ஓவியத்துக்காக வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழுநேர ஓவியராகத் திகழ்பவர். அவருடனான ஓவியர் ஜீவாவின் நேர்காணல்...    நான் சிறுவயது முதலே ஓவியம் வரைந்து வருகிறேன். சரியாக எவ்வளவு வயதில் வரையத் தொடங்கினேன் என்பதைக் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. கடவுள் என்னை இந்த உலகிற்கு அனுப்பி வைத்தபொழுதே அது என்னுள் இருந்திருக்க வேண்டும். இந்த உலகினை இயலும் அளவு வண்ணங்களால் தீட்டவே கடவுள் என்னைப் படைத்தாரோ என்னவோ! ஐந்து வயது இருக்கையில் படம் வரைந்தது நினைவில் உள்ளது. ஆம், அம்மாவின் அடுப்படியில் இருக்கும் கரித்துண்டுகளும், எங்கள் வகுப்பில் கரும்பலகையின் கீழே வீசியெறியப்படும் சாக்பீஸ் துண்டுகளும்தான் என் பொக்கிஷங்கள். என் வீட்டு நிலமும் சுவர்களும்தான் ...

Flash fiction magazine ல் Simon Hole அவர்களின் Wild side குறுங்கதையின் என் மொழியாக்கம்.

Image
கிளர்ச்சி குறுங்கதை அசல் : Simon Hole மொழிமாற்றம் : அரவிந்த் வடசேரி 'நீ எதையுமே திருத்தமாகத் தான் செய்வாய் இல்லையா? ஒரே ஒரு முறை பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்ய மாட்டாயா?' என் வாழ்விலிருந்து வெளியேறும் முன் இது தான் அவன் கடைசியாய் என்னிடம் சொன்னது. அவன் சொன்னது சரியாக இருக்கலாம். நான் கொஞ்சம் அதிகமாகவே நேரான ஆள் தான். மிகச் சில தருணங்களிலாவது நான் சிறிது நெகிழ்ந்து சில சாகசங்களை மேற்கொள்ள வேண்டும். என் மனதை கட்டவிழ்த்து ஓடவிட நேரம் வந்து விட்டது போலும். எனவே தான் இப்பொழுது இங்கு நிற்கிறேன், ஒரு பாய்ச்சலுக்கு தயாராக, கட்டுப்பாடுகளை தகர்த்தெறிய, விதிகளை மீற. இது மிகவும் கிளர்ச்சியூட்டுவதாக இருப்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். இதயம் துடிக்க நான் அந்த கம்பளி ஆடையினை துவைப்பானில் வீசினேன், அதனுடன் இணைந்த குறிப்பு அறிவுறுத்துகிறது, "உலர்சலவை மட்டும்"

ஆவநாழி மென்னிதழில் வெளியான ஓவியர் சுனில் பூக்கோட் அவர்களின் நேர்காணல் - மலையாள உரையாடலின் தமிழ் வடிவம் எனது

Image
ஞாபகங்களில் நனையும் தூரிகை நேர்காணல் - ஓவியர் ஜீவா   தமிழாக்கம் - அரவிந்த் வடசேரி சுனில் பூக்கோட் தன் வித்தியாசமான, தனித்துவமிக்க ஓவியங்களால் கேரளத்தைப் பதிவு செய்யும் ஓவியர். அவரோடு ஓர் உரையாடல்... ஓவியத்தில் ஆர்வம் வந்தது எப்படி? உங்கள் குடும்பத்தில் வேறு ஓவியர்கள் யாரும் உண்டா? நான் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை ஒரு பேருந்து பணியாளர். அம்மா இல்லத்தரசி. கலை சார்ந்த ஏதாவது ஒரு தொடர்பு என்று சொன்னால் அது என் அம்மாவின் குடும்பத்திலிருந்து தான் எனச் சொல்ல முடியும். என் அம்மாவின் அப்பா கட்டிடக் கலைஞர். அந்தக் காலத்தில் பள்ளிவாசல்கள் கட்டுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார். மெருவம்பாயி பள்ளிவாசல் போன்றவற்றை அவர்தான் கட்டினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்து என் அப்பாவின் குடும்பத்தில் கலைஞர்கள் யாரும் இல்லை. ஒரு வேளை மரபணுக்கள் வழி என் முன்னோர்களின் ஈடுபாடு எனக்கு கடத்தப்பட்டிருக்கலாம். நீங்கள் ஓவியம் கற்றுக்கொண்டது குறித்த பகிர்வுகள்... மற்றும் உங்களைக் கவர்ந்த ஓவிய ஆசிரியர்கள்? சிறு வயது முதலே எனக்குப்...

அடையாளங்கள்-சிறுகதை - மலையாள மூலம் : சேது தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி

Image
அடையாளங்கள் மலையாள மூலம் : சேது தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி பேரன் சர்வதமனன் வைத்தியம் படிக்க சீமைக்குச் செல்கிறான் எனும் செய்தி நாராயணி அம்மாவுக்கு பெரிய அதிசயமாக இருந்தது. “எதுக்குப்பா நீ கடல் கடந்து படிக்கப் போகணும், இப்பவே உனக்கு நெறைய தெரியுமே. டவுனிலே தான் உனக்கு பெரிய பேர் இருக்கே” மிகவும் கனிவாகச் சிரித்தான் சர்வதமனன். “உண்மையைச் சொன்னா நமக்கெல்லாம் எவ்வளவு தெரியும் பாட்டி? இந்த உடம்புங்கறதே பெரிய சமுத்திரம் தானே? இனி எவ்வளவு ஜென்மங்கள் எவ்வளவு கடல்களைத் தாண்டினா கொஞ்சமாவது பிடி படுமோ என்னமோ?” அதுவும் சரி தானே என்று பட்டது நாராயணி அம்மாவுக்கு. பெரிய வைத்தியரும் பண்டிதருமாக இருந்தார் மாமா. புகழ்பெற்ற விஷமுறிவு நிபுணரும். அவ்வளவு விஷஜந்துக்களின் பகையும் சாபமும் தான் ஒரு நடுஇரவில் ஏதோ ஒரு பொட்டல் காட்டின் சேறு புரண்ட இருட்டில் யார் கண்ணிலும் படாது நீலம் பாரித்த மரணம். மாமாவின் கால்களை வெகு நேரம் ஆராய்ந்த கீழ்வீட்டில் தாத்தா சொன்னார் “சர்ப்பம் தீண்டினதாகத் தெரியல.” “ஏன்?” “கடிவாய் அடையாளமே இல்லையே,ஊசிப்பொட்டளவு கூட. விஷ லட்சணுமும் இல்லே.” “அப்புறம்?” “காரணமற...
Image
மாத்ருபூமி ஆழ்ச்சப்பதிப்பில் (மலையாள வார இதழ்) பள்ளி கல்லூரி மாணாக்கர்களுக்கான பகுதி உள்ளது. இது பல நேரங்களில் நல்ல படைப்புகளைத் தாங்கி வரும். ஒரு கல்லூரி மாணவியின் என்னைக் கவர்ந்த கவிதையின் என் மொழியாக்கம் இது. உப்பும் இனிப்பும் சரிதா ஸ்ரவண் தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி 'குழம்பில் உப்பு போதாது டீயில் இனிப்பும்' சொல்லி சொல்லி என் வாய் வலித்தது தான் மிச்சமென அவன். அவனுக்கு தெரியவில்லை உப்பு சப்பற்ற ஒரு வாழ்க்கை பற்றி. நீ ஒரு முட்டாள்! ஒரு சொல்லும் ஒரு புன்சிரிப்பும் உப்பும் இனிப்புமாக்கி ஊறுகாயும் தயிர்சாதமும் சாப்பிடத் தெரிந்திருந்தால் இனிப்பாக இருந்திருக்கும் வாழ்க்கை உனக்கும் எனக்கும். இனி உப்பும் இனிப்பும் கூடியும் குறைந்தும் நிலை தடுமாற துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வாழ்ந்து வாழ்ந்து மாய்ந்து போவோம் நாம்.

கவிஞர் மாதவிக்குட்டியின் ஆங்கிலக் கவிதையின் என் மொழியாக்கம்

Image
நடுத்தர வயதினள் ஆங்கிலத்தில் - கவிஞர் மாதவிக்குட்டி தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி எப்பொழுது நண்பர்களாக இருந்த உங்கள் குழந்தைகள் கடு கடுக்கும் முகமும் கருணையற்ற நாவும் கொண்ட விமர்சகர்களாக மாறினரோ, அப்பொழுது நீங்கள் நடுத்தர வயதினள். இப்பொழுது அவர்கள் கூடுடைத்து வெளியேறின கூட்டுப்புழுக்களின் முகத்திலறையும் முதிர்ச்சியின் பேரழகு, உங்களை அவர்களுக்கு தேவையில்லை, தேனீர் தயாரிக்கவும் உடுப்புகளை சலைவை செய்யவும் தவிர. உங்களுக்கோ அவர்கள் எப்பொழுதும் போல மிகவும் வேண்டியவர்களாக இருக்கிறார்கள், குறிப்பாக இப்பொழுது. தனித்து விடப்பட்ட நீங்கள், அவர்களின் புத்தகங்களையும் பொருட்களையும் தடவி இரகசியமாக கொஞ்சம் அழுகிறீர்கள். எப்பொழுதோ நீங்கள் நள்ளிரவில் வரைந்தளித்த கானக விருந்துக்கான அணில்களின் தங்க நிற அழைப்பிதழ் கண்டு, 'வாழ்க்கை முழுவதும் கனவுலகத்திலேயே வாழ்ந்து விட்டீர்கள், இப்பொழுதாவது விழித்துக் கொள்ளுங்கள். அம்மா, உங்களுக்கு வயதாகி விட்டது' என எப்பொழுது வெறுப்புடன் உங்கள் மகன் கத்துகிறானோ, அப்பொழுது நீங்...

நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளர் Louise Gluck அவர்களின் A fantasy எனும் கவிதை என் மொழிமாற்றத்தில்

Image
ஒரு கனவு லூயிஸ் க்ளக் தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்: தினமும் யாராவது இறக்கிறார்கள். அது ஒரு ஆரம்பம் மட்டும் தான். ஒவ்வொரு நாளும் மயானங்களில் புதிதாக விதவைகள் பிறக்கிறார்கள், புது அனாதைகள். அவர்கள் தலையினை கையில் தாங்கி அமர்ந்திருக்கிறார்கள், தங்கள் புது வாழ்வினை முடிவு செய்ய முயன்றபடி. அவர்களில் சிலர் முதல் முறையாக வருகிறார்கள் மயானத்திற்கு. அவர்கள் அழக்கூட பயந்தவர்களாயிருக்கிறார்கள், சில நேரங்களில் அழாமலிருப்பதற்கும். யாரோ அவர்களின் காதில் கிசுகிசுக்கிறார்கள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்று, சில மந்திரங்களை உச்சரிக்க அல்லது திறந்திருக்கும் குழியில் ஒரு பிடி மண் அள்ளிப்போட. அதன் பிறகு அனைவரும் அவள் வீட்டிற்கு வருகிறார்கள், திடீரென வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருக்கிறார்கள். விதவை கட்டிலில் அமர்ந்திருக்கிறாள், வெகு பாங்காக, வந்தவர்கள் வரிசையாக அவளிடம் வரத் தோதாக, சிலர் அவள் கையினை பற்றிக்கொள்கின்றனர், சிலர் மென்மையாக அணைக்கின்றனர். அவளிடம் அனைவருக்கும் சொல்ல ஏதோ ஒன்றிருக்கிறது, நன்றி, உதவிக்கு ந...

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

Image
டச் ஸ்க்ரீன் அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம் மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி தழும்பேறிய விரலாக இருந்தும் எவ்வளவு அழுத்தினாலும் வேலை செய்யவில்லை. "டச் ஸ்க்ரீன் டாடி, மெதுவாக அழுத்தினால் போதும் அழுத்தக்கூட வேண்டாம் சும்மா தொட்டால் போதும். உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்- இதோ இப்படி." அவன் விரல் தண்ணீரின் மேல் இயேசுவைப் போல நகர்ந்தது. ஆசைப்படி இயங்குகிறது உலகம். உலகம் வசப்படாதிருந்ததன் காரணம் இது தானோ? நான் தேவைக்குமேல் பலம் பிரயோகித்திருந்தேனோ? என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை நான் விரும்பியவற்றை விரும்புவது கண்டு வீணாக வருத்தப்பட்டேன். எதிரிகளுக்கெல்லாம் ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய் என இறைவனிடம் வருத்தப்பட்டேன். மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர என்னால் முடியவில்லை. முதல் அடியிலேயே நான் நீரில் மூழ்கிவிட்டேன். பூக்கள் மலர்வது யாராவது பலம் பிரயோகிப்பதாலா? நான் மட்டும் பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல ஓசையுடன் மலர்ந்தேன். நெற்றிவியர்வையை அதிகமாக கொதிக்கவிட்டு அப்பம் வேகவைத்தேன். அதுவோ ஐயாயிரம் போகட்டும் ஐந்து கூட தேறவில்...

பாபேல் - கவிதை - மலையாள மூலம் :கல்பட்டா நாராயணன்-(അച്ഛനും മകളും)-தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி

Image
அப்பா: மொபைல் மார்போடணைத்துறங்கும் மகளின் முகத்தின் நிறைவு என்னை பயம் கொள்ளச் செய்கிறது. எந்த ஒரு மரத்திலும் நிலத்திலும் நிலைக்காத என் பலசெல் உயிரி ஒரு செல் உயிரியாக தனக்குள் முடங்கிக் கொண்டதோ? பல காலத்து அலைச்சலுக்குப் பின் துவக்கப் புள்ளிக்கே திரும்பி வந்ததோ? பற்பல ஜன்மங்களினூடே அப்பா காண்கிறேன் பயன்பாடு குறைந்து குறைந்து உன் கைகால்கள் மெலிந்து வருவது! ஒரு விரலும் துடிப்புமாக நீ சுருங்குவது. அண்மைக்காலமாக நான் பார்க்கிறேன் நீ நடக்காமலே உன் வேலைகள் நடப்பது வகுப்புக்குச் செல்லாமலே தேர்வுகளில் நீ வெல்வது வங்கிக்குச் செல்லாமலே வர்த்தகம் செய்வது. நெருப்பின்றி நீரின்றி நெல் இன்றி சமைப்பதும், விதைக்காமல் அறுப்பதும், எங்கேயும் செல்லாமல் எங்கும் இருப்பதும். எல்லாமும் எதுவுமில்லாமல் நடக்கின்றன. இருந்த இடத்திலிருந்தே உறவு பூணுகிறாய் இருந்த இடத்திலிருந்தே உறவு முறிக்கிறாய் பொது இடங்களை வெறிச்சோடச் செய்கிறாய் பாட்டரங்குகளை மோனத்தில் மூழ்கடிக்கிறாய் உழைப்பை உதாசீனம் செய்கிறாய் எச்சிலாய்ப் போன காலத்தை துச்சமாய்ப் போன தூரத்தை விரலால் சுண்டி விசிறுகிறாய். ...