Posts

உலகத் தாய்மொழி நாள் உரை

Image
சாகித்திய அகாதெமி சார்பில் கோவை பாரதியார் பல்கலைக்கழக்கத்தில் மலையாளம் ஆரம்பத்தில், திராவிட மொழிதான் இலங்கையின் வடக்குப் பிராந்தியம் தொடங்கி பலூசிஸ்தான் வரையிலான நிலப்பரப்பில் பேசப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்கிறார் உள்ளூர் எஸ் பரமேஸ்வர ஐயர் கேரள சாகித்ய சரித்ரத்தில். ஆரியர்களிடம் தோற்ற திராவிடர்களின் மொழி, தென்னிந்தியாவைத் தவிர்த்த இந்திய நிலப்பரப்பில், அதிகாரத்தின் மொழியாகவும் வளமை மிக்கதாகவும் இருந்த சமஸ்கிருதத்தினால் வழக்கொழிந்து போயிற்று. தமிழ் எனும் சொல் தான் மருவி சமஸ்கிருதத்தில் திராவிடம் என மாறியது என்கிறார் உள்ளூர். இந்தியாவின் பிற பகுதிகளைப் போலல்லாமல், தெற்கில், ஆரியர்கள், போரில் வென்று இடம் பிடிக்கவில்லை. மாறாக, அவர்கள் வைத்தியர்களாகவும், ஆன்மீக வழிகாட்டிகளாகவும், விரும்பி அழைக்கப்பட்டு, மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். அவர்களுடனான ஊடாடல் வாயிலாக வடமொழிச் சொற்களை தற்பவப்படுத்தி, மொழிக்கு மேலும் வளமையும் வலிமையும் ஏற்படுத்தும் வகையிலான நட்புணர்வுடன் செயல்பட வாய்த்தது. திராவிட மொழியான தமிழை பழந்தமிழ் எனக்கொள்ளலாம். இது காலப்போக்கில் வட திராவிடம் எனவ...

நூலறிமுகம் - பெருமாள்முருகன் அவர்களின் போண்டு

Image
போண்டு பெருமாள்முருகன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு அனைவருக்கும் வணக்கம்! வாய்ப்பினை அளித்த நணபர் எழுதாளர் அ.ப்ரகாஷ் அவர்களுக்கும் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கும் Critical Revelutionaries மற்றும் அயோத்திதாசர் மாணவர்கள் அமைப்பிற்கும் நன்றி. பெருமாள்முருகனின் போண்டு சிறுகதைத் தொகுப்பு மனிதர்களுக்கும் வளர்ப்பு விலங்குகளுக்குமான உறவைச் சொல்கின்ற கதைகள். இதன் முதல் பதிப்பு டிசம்பர் 2024 லும் இரண்டாம் பதிப்பு ஜூலை 2025 லும் வெளியாகியுள்ளது. காலச்சுவடு பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். இந்தத் தொகுப்பின் பதினோரு கதைகள் 2024 ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி 2025 ஆம் ஆண்டு ஜனவரி வரைக்கும் பல்வேறு அச்சு இணைய இதழ்களில் வெளியானவை. சில கதைகளை அவை வெளியானபோதே வாசித்திருந்தேன். குறிப்பாக போண்டு, இளன், பொங்கி கதைகள் வாசிக்கத் தொடங்கியதும் நினைவில் இருப்பது தெரிந்தது. இருந்தாலும் அவை தனித்தனியாக வாசிக்கப்பட்டதைவிட மேலும் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருவதாக இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது. சிறுகதைகளை தொகுப்பாக வாசிக்க வேண்டியதன் அவசியத்தை இத்தொகுப்பு எனக்கு உணர்த்தியுள்ளது. பெருமாள்முருகனின்...

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

Image
ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல் “எல்லாரும் போறாங்கப்பா… நான் அவ்ளவு பிராக்டீஸ் பண்ணியாச்சு. ரொம்ப பாதுகாப்பான எடம்தான்” என்று சாதனா சொன்னாள். விறகு வெடிக்க எரிந்து கணப்பு ஓசையிட்டது. எஞ்சிய டீயை குடித்துக்கொண்டு கோப்பையை கீழே வைத்துவிட்டு ராகவன் “எந்த ஊர்னு சொன்னே?” என்றார். “இன்வெர்நெஸ்” என்றாள் சாதனா. ராகவன் தன் செல்பேசியை எடுத்து அந்த இடம் எது என்று பார்த்தார். நெஸ் ஆற்றின் அழிமுகம். முழுமையாகவே உறைந்து பனிப்பாளப் பரப்பாக ஆகிவிட்டிருப்பதுதான் நெஸ் ஆறு. அந்த பனித்தரைக்குள் அது மௌனமாக, ரகசியமாக கடலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் அப்பெயரை அதற்கு முன் கேட்டிருக்கவில்லை. ஆகவே அது ஒரு செயல் என்று நினைத்தாள். “அப்டின்னா என்னது? ரொம்பக் குளிரா இருக்கிறதச் சொல்றாங்களா?” என்று கேட்டாள். அவள் அடைந்த குழப்பத்தை உடனே சாதனா புரிந்துகொண்டாள். வழக்கம்போல பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துவிட்டு, அவளுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டி கொஞ்சி, “சோ க்யூட்” என்ற பின் “அது ஒரு ஊர்மா” என்றாள். “அதான் எந்த ஊருன்னு கேட்டேன்” “இன்வெர்னெஸ்னா நீ என்னமோ கைன்ட்நெஸ், கிய...

அக்காள் சிறுகதை

Image
அக்காள் எம் டி வாசுதேவன் நாயரின் மலையாளச் சிறுகதை ஓப்போள் இன் மொழியாக்கம் அக்காள் அழுதுக் கொண்டிருக்கிறாள். அக்காள் அழுவதைக் காண அப்புவிற்கு பிடிக்காது. வடக்குப்பக்க அறையின் ஜன்னல் திண்டின் மீது நெற்றியை அழுத்தி வைத்துக் கொண்டு அக்காள் அழுகிறாள். அவருக்கு எப்பொழுதும் அழுகையோ அழுகைதான்! ஒரு வேளை, பாட்டி திட்டியிருப்பாள். பாட்டி அப்புவையும் திட்டுவதுண்டு. அவனுக்கு அழுகையில்லை, கோபம்தான் வரும். அக்காளின் அளவிற்கு வளர்ந்திருந்தால் அவன் ஒரு கை பார்த்திருபான். அக்காள் இவ்வளவு பெரிதான பிறகும் பாட்டி திட்டுவதையெல்லாம் வெறுமனே கேட்டுக் கொண்டிருப்பார். அப்பொழுது அக்காளின் முகம் வாட்டமடையும். கண்கள் நிறைந்துவிடும். அதைக் கண்டதும் அவன் மெதுவாக நழுவிச் செல்வதுதான் வழக்கம். அழும்போது அக்காளின் பக்கத்தில் நிற்க அவனால் முடியாது. அழுதுக் கொண்டே அக்காள் அவனை கட்டிக் கொள்வாள். அணைத்து இறுக்குவது அவனுக்கு பிடிக்கும்தான். ஆனால், ‘செல்லமே’ என முணுமுணுத்தபடி நெற்றியிலும் தலையிலும் முத்தமிடுகையில் சூடான கண்ணீர்த் துளிகள் அப்புவின் உடலின் மீது சொட்டும். அப்பொழுது அவனுக்கும் சும்மா அழத்தோன்றும். ...

கலவரம் - ஆங்கிலச் சிறுகதையின் மொழியாக்கம்

கலவரம் அரவிந்த் வடசேரி ஆங்கிலத்திலிருந்து நாங்கள் மேம்பாலத்துக்கு அடியில் உட்கார்ந்திருக்கிறோம், நானும் மோளியும், விளக்குகளை அணைத்து, இஞ்சினை ஓடவிட்டு, குன்றின் மீதமைந்த வீடுகளின் வரிசைகளை கார்க்கண்ணாடியின் வழியாக வெறித்தபடி. மோளியின் மடி மீது ஸ்டியரிங் வீலின் மேல் சாய்த்து வைத்திருந்த கிளிப் வைத்த அட்டையில் அந்தத் தெருவின் முகவரிகள், மொத்தம் ஐம்பது, பக்கத்தில் தொடர்பான விபரங்கள்- பெயர், வயது போன்றவை, இன்டர்நெட்டிலிருந்து திரட்டியது அவளின் திருத்தமான கையெழுத்தில், அவள் புறநகரின் சிறந்த பள்ளியொன்றில்தான் படித்திருகக்கிறாள் என்பதன் ஆதாரமாக. இருட்டிக்கொண்டிருக்கிறது குளிரவும் தொடங்கியது, சில சம்பிரதாயமான - கடுமையான வாக்கியங்களைத் தவிர வேறெதுவும் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசவில்லை, அவளின் பக்கத்து கண்ணாடியை மேலேற்றியதற்காக அவளுக்கு நான் நன்றி சொன்னது போன்று, ஏதோ அவள் எனக்கு பெரிய உதவி செய்தது போல. “யூ ஆர் வெல்கம்”, அவள் சொன்னாள், ஆனால் அவள் அதை பாதி தான் மூடினாள். வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததுமே தகராறு தொடங்கியது; முதலில் விவாதம், பிறகு கத்தத் தொடங்கினோம், அப்புறம் ...