உலகத் தாய்மொழி நாள் உரை
சாகித்திய அகாதெமி சார்பில் கோவை பாரதியார் பல்கலைக்கழக்கத்தில் மலையாளம் ஆரம்பத்தில், திராவிட மொழிதான் இலங்கையின் வடக்குப் பிராந்தியம் தொடங்கி பலூசிஸ்தான் வரையிலான நிலப்பரப்பில் பேசப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்கிறார் உள்ளூர் எஸ் பரமேஸ்வர ஐயர் கேரள சாகித்ய சரித்ரத்தில். ஆரியர்களிடம் தோற்ற திராவிடர்களின் மொழி, தென்னிந்தியாவைத் தவிர்த்த இந்திய நிலப்பரப்பில், அதிகாரத்தின் மொழியாகவும் வளமை மிக்கதாகவும் இருந்த சமஸ்கிருதத்தினால் வழக்கொழிந்து போயிற்று. தமிழ் எனும் சொல் தான் மருவி சமஸ்கிருதத்தில் திராவிடம் என மாறியது என்கிறார் உள்ளூர். இந்தியாவின் பிற பகுதிகளைப் போலல்லாமல், தெற்கில், ஆரியர்கள், போரில் வென்று இடம் பிடிக்கவில்லை. மாறாக, அவர்கள் வைத்தியர்களாகவும், ஆன்மீக வழிகாட்டிகளாகவும், விரும்பி அழைக்கப்பட்டு, மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். அவர்களுடனான ஊடாடல் வாயிலாக வடமொழிச் சொற்களை தற்பவப்படுத்தி, மொழிக்கு மேலும் வளமையும் வலிமையும் ஏற்படுத்தும் வகையிலான நட்புணர்வுடன் செயல்பட வாய்த்தது. திராவிட மொழியான தமிழை பழந்தமிழ் எனக்கொள்ளலாம். இது காலப்போக்கில் வட திராவிடம் எனவ...