Skip to main content

Posts

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல் “எல்லாரும் போறாங்கப்பா… நான் அவ்ளவு பிராக்டீஸ் பண்ணியாச்சு. ரொம்ப பாதுகாப்பான எடம்தான்” என்று சாதனா சொன்னாள். விறகு வெடிக்க எரிந்து கணப்பு ஓசையிட்டது. எஞ்சிய டீயை குடித்துக்கொண்டு கோப்பையை கீழே வைத்துவிட்டு ராகவன் “எந்த ஊர்னு சொன்னே?” என்றார். “இன்வெர்நெஸ்” என்றாள் சாதனா. ராகவன் தன் செல்பேசியை எடுத்து அந்த இடம் எது என்று பார்த்தார். நெஸ் ஆற்றின் அழிமுகம். முழுமையாகவே உறைந்து பனிப்பாளப் பரப்பாக ஆகிவிட்டிருப்பதுதான் நெஸ் ஆறு. அந்த பனித்தரைக்குள் அது மௌனமாக, ரகசியமாக கடலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் அப்பெயரை அதற்கு முன் கேட்டிருக்கவில்லை. ஆகவே அது ஒரு செயல் என்று நினைத்தாள். “அப்டின்னா என்னது? ரொம்பக் குளிரா இருக்கிறதச் சொல்றாங்களா?” என்று கேட்டாள். அவள் அடைந்த குழப்பத்தை உடனே சாதனா புரிந்துகொண்டாள். வழக்கம்போல பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துவிட்டு, அவளுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டி கொஞ்சி, “சோ க்யூட்” என்ற பின் “அது ஒரு ஊர்மா” என்றாள். “அதான் எந்த ஊருன்னு கேட்டேன்” “இன்வெர்னெஸ்னா நீ என்னமோ கைன்ட்நெஸ், கிய...

அக்காள் சிறுகதை

அக்காள் எம் டி வாசுதேவன் நாயரின் மலையாளச் சிறுகதை ஓப்போள் இன் மொழியாக்கம் அக்காள் அழுதுக் கொண்டிருக்கிறாள். அக்காள் அழுவதைக் காண அப்புவிற்கு பிடிக்காது. வடக்குப்பக்க அறையின் ஜன்னல் திண்டின் மீது நெற்றியை அழுத்தி வைத்துக் கொண்டு அக்காள் அழுகிறாள். அவருக்கு எப்பொழுதும் அழுகையோ அழுகைதான்! ஒரு வேளை, பாட்டி திட்டியிருப்பாள். பாட்டி அப்புவையும் திட்டுவதுண்டு. அவனுக்கு அழுகையில்லை, கோபம்தான் வரும். அக்காளின் அளவிற்கு வளர்ந்திருந்தால் அவன் ஒரு கை பார்த்திருபான். அக்காள் இவ்வளவு பெரிதான பிறகும் பாட்டி திட்டுவதையெல்லாம் வெறுமனே கேட்டுக் கொண்டிருப்பார். அப்பொழுது அக்காளின் முகம் வாட்டமடையும். கண்கள் நிறைந்துவிடும். அதைக் கண்டதும் அவன் மெதுவாக நழுவிச் செல்வதுதான் வழக்கம். அழும்போது அக்காளின் பக்கத்தில் நிற்க அவனால் முடியாது. அழுதுக் கொண்டே அக்காள் அவனை கட்டிக் கொள்வாள். அணைத்து இறுக்குவது அவனுக்கு பிடிக்கும்தான். ஆனால், ‘செல்லமே’ என முணுமுணுத்தபடி நெற்றியிலும் தலையிலும் முத்தமிடுகையில் சூடான கண்ணீர்த் துளிகள் அப்புவின் உடலின் மீது சொட்டும். அப்பொழுது அவனுக்கும் சும்மா அழத்தோன்றும். ...

கலவரம் - ஆங்கிலச் சிறுகதையின் மொழியாக்கம்

கலவரம் அரவிந்த் வடசேரி ஆங்கிலத்திலிருந்து நாங்கள் மேம்பாலத்துக்கு அடியில் உட்கார்ந்திருக்கிறோம், நானும் மோளியும், விளக்குகளை அணைத்து, இஞ்சினை ஓடவிட்டு, குன்றின் மீதமைந்த வீடுகளின் வரிசைகளை கார்க்கண்ணாடியின் வழியாக வெறித்தபடி. மோளியின் மடி மீது ஸ்டியரிங் வீலின் மேல் சாய்த்து வைத்திருந்த கிளிப் வைத்த அட்டையில் அந்தத் தெருவின் முகவரிகள், மொத்தம் ஐம்பது, பக்கத்தில் தொடர்பான விபரங்கள்- பெயர், வயது போன்றவை, இன்டர்நெட்டிலிருந்து திரட்டியது அவளின் திருத்தமான கையெழுத்தில், அவள் புறநகரின் சிறந்த பள்ளியொன்றில்தான் படித்திருகக்கிறாள் என்பதன் ஆதாரமாக. இருட்டிக்கொண்டிருக்கிறது குளிரவும் தொடங்கியது, சில சம்பிரதாயமான - கடுமையான வாக்கியங்களைத் தவிர வேறெதுவும் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசவில்லை, அவளின் பக்கத்து கண்ணாடியை மேலேற்றியதற்காக அவளுக்கு நான் நன்றி சொன்னது போன்று, ஏதோ அவள் எனக்கு பெரிய உதவி செய்தது போல. “யூ ஆர் வெல்கம்”, அவள் சொன்னாள், ஆனால் அவள் அதை பாதி தான் மூடினாள். வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததுமே தகராறு தொடங்கியது; முதலில் விவாதம், பிறகு கத்தத் தொடங்கினோம், அப்புறம் ...

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம் அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை. 1. நான் யார்? ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு, மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று. பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம், கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும் நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக...