ஆவநாழி இதழில் நான் எழுதிய நூல் அறிமுகம் - குமரகுரு அன்பு அவர்களின் ஒரு உபரியின் கவிதைகள் - கவிதைத் தொகுப்பு
ஒரு உபரியின் கவிதைகள் குமரகுரு அன்பு நூல் அறிமுகம் - அரவிந்த் வடசேரி 64 பக்கங்கள் காக்கை பிரதிகள் வெளியீடு முதற் பதிப்பு ஜூன் 2020 விலை ரூ 60. வாழ்வெங்கும் விரவியிருக்கும் கீழ்மையையும் சுரண்டலையும் காணும் ஒரு சாதாரண மனிதனின் எதிர்வினை எப்படி இருக்க முடியும். அவலங்களை மறுத்து வாழ்வின் மேலானதெனக் கருதும் சில தருணங்களின் நிழலில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை எனும் போதையில் நிகழ்வினை மறந்து கனவுகள் காணலாம். இல்லையெனில், உண்மையின் வேள்வித் தீயின் உட்புகுந்து அழிக்க முனைந்து தானும் அழிந்து போகலாம். ஆனால் இவ்விரண்டு தேர்வுகளுமே வாழ்வின் இரு முரண் எல்லைகள். இந்த விருப்பங்கள் சாதாரணனுக்கு கைகூடுவது இல்லை. வாழ்வின் நிதர்சனங்களோடு சமரசம் புரிந்து அதன் அழுத்ததில் வாழ்ந்து மடிவது தான் அவனுக்கு வாய்க்கிறது. ஆனால் ஒரு படைப்பாளி இந்த அழுத்தத்தினைத் தன் கலைகளில் வெளிப்படுத்தி ஆசுவாசம் கொள்கிறான். குமரகுரு அன்புவின் 'ஒரு உபரியின் கவிதைகள்' இது போன்றவோர் இயலாமையின் வெளிப்பாடாக, எப்படியாவது இந்நிலையினை மாற்றும் வழி விரும்பி அலையும் ஆன்மாவின் குரலாக ஒலிக்கிறது. இந்த உலகில் ...