Skip to main content

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

டச் ஸ்க்ரீன்

அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம்
மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி

தழும்பேறிய விரலாக இருந்தும்
எவ்வளவு அழுத்தினாலும்
வேலை செய்யவில்லை.
"டச் ஸ்க்ரீன் டாடி,
மெதுவாக அழுத்தினால் போதும்
அழுத்தக்கூட வேண்டாம்
சும்மா தொட்டால் போதும்.
உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்-
இதோ இப்படி."
அவன் விரல்
தண்ணீரின் மேல்
இயேசுவைப் போல நகர்ந்தது.
ஆசைப்படி இயங்குகிறது உலகம்.

உலகம் வசப்படாதிருந்ததன் காரணம்
இது தானோ?
நான் தேவைக்குமேல்
பலம் பிரயோகித்திருந்தேனோ?
என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை
நான் விரும்பியவற்றை
விரும்புவது கண்டு
வீணாக வருத்தப்பட்டேன்.
எதிரிகளுக்கெல்லாம்
ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய்
என இறைவனிடம் வருத்தப்பட்டேன்.
மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர
என்னால் முடியவில்லை.
முதல் அடியிலேயே
நான் நீரில் மூழ்கிவிட்டேன்.

பூக்கள் மலர்வது
யாராவது பலம் பிரயோகிப்பதாலா?
நான் மட்டும்
பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல
ஓசையுடன் மலர்ந்தேன்.
நெற்றிவியர்வையை
அதிகமாக கொதிக்கவிட்டு
அப்பம் வேகவைத்தேன்.
அதுவோ ஐயாயிரம் போகட்டும்
ஐந்து கூட தேறவில்லை.
என் இயேசு அற்புதங்களை காட்டிய இயேசுவல்ல
தேவைக்கதிமாக சிரமப்பட்ட இயேசு.

பூட்டப்பட்ட கதவுகளை
எளிதாக திறப்பவர்களை
நான் கண்டிருக்கிறேன்.
வெறுமனே குண்டூசியால்
'நவதால்' பூட்டுதிறந்த நண்பனின் கண்ணில்
கயவனின் புன்னகை மின்னுவதைக் கண்டேன்.
அசாத்ததியமானதை செய்தவன்
சாத்தியமானதை செய்தவன் அளவுகூட
சிரமப்படாததை பார்த்திருக்கிறேன்.
ஏமாற்றுக்காரனை
ஜாலவித்தைக்காரன் என வாழ்த்துவதும் கண்டேன்.
நான் பாறையில் அமைத்தேன்
அவர்களோ தண்ணீரிலும்.

திறக்க பலம் வேண்டாத கதவின் முன்
எதற்காக வந்தானென்பதை மறந்து
ஒரு தனியன் நிற்கிறான்.
"மெதுவாக அழுத்தினால் போதும்
அழுத்தகூட வேண்டாம்
சும்மா தொட்டால் போதும்.
உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்..."

Comments

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல் “எல்லாரும் போறாங்கப்பா… நான் அவ்ளவு பிராக்டீஸ் பண்ணியாச்சு. ரொம்ப பாதுகாப்பான எடம்தான்” என்று சாதனா சொன்னாள். விறகு வெடிக்க எரிந்து கணப்பு ஓசையிட்டது. எஞ்சிய டீயை குடித்துக்கொண்டு கோப்பையை கீழே வைத்துவிட்டு ராகவன் “எந்த ஊர்னு சொன்னே?” என்றார். “இன்வெர்நெஸ்” என்றாள் சாதனா. ராகவன் தன் செல்பேசியை எடுத்து அந்த இடம் எது என்று பார்த்தார். நெஸ் ஆற்றின் அழிமுகம். முழுமையாகவே உறைந்து பனிப்பாளப் பரப்பாக ஆகிவிட்டிருப்பதுதான் நெஸ் ஆறு. அந்த பனித்தரைக்குள் அது மௌனமாக, ரகசியமாக கடலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் அப்பெயரை அதற்கு முன் கேட்டிருக்கவில்லை. ஆகவே அது ஒரு செயல் என்று நினைத்தாள். “அப்டின்னா என்னது? ரொம்பக் குளிரா இருக்கிறதச் சொல்றாங்களா?” என்று கேட்டாள். அவள் அடைந்த குழப்பத்தை உடனே சாதனா புரிந்துகொண்டாள். வழக்கம்போல பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துவிட்டு, அவளுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டி கொஞ்சி, “சோ க்யூட்” என்ற பின் “அது ஒரு ஊர்மா” என்றாள். “அதான் எந்த ஊருன்னு கேட்டேன்” “இன்வெர்னெஸ்னா நீ என்னமோ கைன்ட்நெஸ், கிய...

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம் அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை. 1. நான் யார்? ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு, மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று. பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம், கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும் நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக...