Skip to main content

குருதி

திரைப்படம் - மலையாளம்

திரைச்சுவை : அரவிந்த் வடசேரி

“கடவுளா பாத்து அவன நமக்கு முன்னாலே தொங்க விட்டுத் தந்தார்.”

“ஒரு கத்தி இருந்திருந்தா குத்திக் கொன்றிருக்கலாம் இல்லையா?”

“கத்தியால குததுறதும் துப்பாக்கியாலே சுடுறதும் யார் வேணா செய்யலாம். கொல்ல வேண்டியவுங்கள கொல்லவேண்டிய நேரத்தில கொல்ல சில பேரால் மட்டும் தான் முடியும். தர்மயுத்ததில் அர்ஜுனன் போல.”

“தர்மயுத்தமா?”

“ஆமா, இப்போ உலகம் முழுக்க நடக்குதே அது தான் தர்மயுத்தம். முடிவே இல்லாத யுத்தம்.”

“இப்போ நீ சொன்னியே அது மட்டும் சரி தான். மனுஷன் ரெண்டு கால்லே நடக்க ஆரம்பிச்சதுல இருந்து நிறுத்தாம பண்றது ஒண்ணு மட்டும் தான். சண்டை போடறதும் கொல்லறதும்.”

“அப்போ இது எல்லாம் நடக்கறதுக்கு காரணமே இல்லேங்கறீங்களா?”

“இருக்குமே. எப்பவும் ஒரு காரணம் இருக்கத்தானே செய்யும்.”

“என்ன?”

“வெறுப்பு. மனுஷனுக்கு எப்பவும் வெறுக்க ஏதாவது ஒண்ணு வேணும். அந்த வெறுப்பை நிலைநிறுத்த நமக்குள்ளே என்னைக்கும் இருக்கும் ஒரு ‘அவர்களும்’ ஒரு ‘நாமளும்’.வெறுப்பு ஒரு பொறி போதும். அது கனன்று ஒரு பெருநெருப்பா எரியும் . ஒரு தடவ எரிஞ்சுதுன்னா அப்புறம் அது அணையாம இருக்க நாம வெறுத்துகிட்டே இருப்போம். கடைசீல ஜெயிச்சுட்டோம்னு நமக்கு நாமே பொய் சொல்லி அந்த நெருப்பிலேயே எரிஞ்சு அழிஞ்சு போவோம் .”

இதை வாசித்தால் ஏதோ செவ்விலகக்கியத்திலிருந்து மேற்கோள் போல் தெரிகிறது இல்லையா? ஆனால், இது ஒரு திரைப்படத்தின் வசனம். இத்தனைக்கும் அது ஒரு ஜனரஞ்சகப் படம். அது குருதி எனும் மலையாளத் திரைப்படம். இவ்வளவு வலுவான வசனங்கள் வெகு இயல்பாக பேசப்படுவது தான் என்னை மிகவும் கவர்ந்தது.

ஒரு பெரிய இந்து முஸ்லீம் மதக் கலவரம் உருவாக அனைத்து சாத்தியங்களும் கொண்ட நிகழ்வுகள் நடந்த ஒரு கிராமம் தான் கதையின் களம். பின்புலமாக ஒரு ஆண்டிற்குமுன் நடந்த நிலச்சரிவும்.

தான் செய்வது அனைத்தும் மறுமையில் சொர்க்கத்தை அடைய ஏதுவாக இருக்க வேண்டும் எனும் தீர்க்கமான ஆவல் கொண்டவன் கதாநாயகன். அதற்கு அவனுக்கு இருக்கும் காரணமும் வலுவானது தான். நிலச்சரிவில் சொர்க்கத்தை அடைந்த தன் மகளை மீண்டும் ஒரு முறையாவது அங்கு போய் காண வேண்டும். அவனுக்கு மிகவும் பயமாய் இருக்கிறது அதை நினைத்தால். தான் செய்வது சரியா என பல வேளைகளில் சந்தேகம் வருகிறது. சந்தேகம் விசுவாசத்தின் அறிகுறி என்கிறார் மதகுரு. பிரார்த்தனை செய்தால் சரி எது எனும் தெளிவு கிடைக்கும் என அறிவுறுத்துகிறார். அவனுக்குத் தான் எவ்வளவு பெரிய சோதனை வந்து சேர்கிறது. அவன் வெல்கிறானா? என்பதைச் சொல்கிறது கதை. காட்சியமைப்பும் வசனங்களும் ஒரு இலக்கணமாகக் கொள்ளக்கூடியவை என்பது என் எண்ணம்.இவ்வளவு கனமான கதையில் எவ்வளவு இயல்பான நடிப்பு. அனைவரின் நடிப்பும் பிரமாதமாக இருந்தாலும் மம்முக்கோயாவும் முரளி கோபியும் அசாத்தியமாக நடித்திருக்கிறார்கள். கோல்ட் கேஸ் திரைப்படத்தில் வந்த பிரித்வி ராஜ் தானா இது? அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Comments

Post a Comment

Please leave a Comment
கருத்துக்கள் வரவேற்கிறேன்

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல் “எல்லாரும் போறாங்கப்பா… நான் அவ்ளவு பிராக்டீஸ் பண்ணியாச்சு. ரொம்ப பாதுகாப்பான எடம்தான்” என்று சாதனா சொன்னாள். விறகு வெடிக்க எரிந்து கணப்பு ஓசையிட்டது. எஞ்சிய டீயை குடித்துக்கொண்டு கோப்பையை கீழே வைத்துவிட்டு ராகவன் “எந்த ஊர்னு சொன்னே?” என்றார். “இன்வெர்நெஸ்” என்றாள் சாதனா. ராகவன் தன் செல்பேசியை எடுத்து அந்த இடம் எது என்று பார்த்தார். நெஸ் ஆற்றின் அழிமுகம். முழுமையாகவே உறைந்து பனிப்பாளப் பரப்பாக ஆகிவிட்டிருப்பதுதான் நெஸ் ஆறு. அந்த பனித்தரைக்குள் அது மௌனமாக, ரகசியமாக கடலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் அப்பெயரை அதற்கு முன் கேட்டிருக்கவில்லை. ஆகவே அது ஒரு செயல் என்று நினைத்தாள். “அப்டின்னா என்னது? ரொம்பக் குளிரா இருக்கிறதச் சொல்றாங்களா?” என்று கேட்டாள். அவள் அடைந்த குழப்பத்தை உடனே சாதனா புரிந்துகொண்டாள். வழக்கம்போல பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துவிட்டு, அவளுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டி கொஞ்சி, “சோ க்யூட்” என்ற பின் “அது ஒரு ஊர்மா” என்றாள். “அதான் எந்த ஊருன்னு கேட்டேன்” “இன்வெர்னெஸ்னா நீ என்னமோ கைன்ட்நெஸ், கிய...

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம் அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை. 1. நான் யார்? ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு, மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று. பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம், கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும் நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக...

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

டச் ஸ்க்ரீன் அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம் மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி தழும்பேறிய விரலாக இருந்தும் எவ்வளவு அழுத்தினாலும் வேலை செய்யவில்லை. "டச் ஸ்க்ரீன் டாடி, மெதுவாக அழுத்தினால் போதும் அழுத்தக்கூட வேண்டாம் சும்மா தொட்டால் போதும். உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்- இதோ இப்படி." அவன் விரல் தண்ணீரின் மேல் இயேசுவைப் போல நகர்ந்தது. ஆசைப்படி இயங்குகிறது உலகம். உலகம் வசப்படாதிருந்ததன் காரணம் இது தானோ? நான் தேவைக்குமேல் பலம் பிரயோகித்திருந்தேனோ? என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை நான் விரும்பியவற்றை விரும்புவது கண்டு வீணாக வருத்தப்பட்டேன். எதிரிகளுக்கெல்லாம் ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய் என இறைவனிடம் வருத்தப்பட்டேன். மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர என்னால் முடியவில்லை. முதல் அடியிலேயே நான் நீரில் மூழ்கிவிட்டேன். பூக்கள் மலர்வது யாராவது பலம் பிரயோகிப்பதாலா? நான் மட்டும் பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல ஓசையுடன் மலர்ந்தேன். நெற்றிவியர்வையை அதிகமாக கொதிக்கவிட்டு அப்பம் வேகவைத்தேன். அதுவோ ஐயாயிரம் போகட்டும் ஐந்து கூட தேறவில்...