நிதர்சனம்
அரவிந்த் வடசேரி
கடிபட்ட நாயாய்
முடங்கிக் கிடக்கிறது மனம்
காயங்களை நக்கியபடி.
வீராப்பாய் விரட்டிச் சென்று
வேண்டிப் பெற்றவை பல,
வழிமறிக்கும் விதியிடம்
உரிமை கோரி உரசியதில் சில,
அன்பென்று அடங்கிப்போய்
அவமதிப்பாய் கொஞ்சம்,
அடுத்தவன் சினம் தீர்க்க
கிடைத்தன இன்னும் சில,
அற்பமாம் ஆசையின்
அவதியாய் மீதம்.
அப்பொழுது மட்டுமே
வெற்றியும் தோல்வியும்.
எப்பொழுதும் இருப்பதோ
ஈ மொய்க்கும் புண்களும்
வலி தரும் வடுக்களும்.

👍❤️
ReplyDelete❤️
ReplyDeleteThank you
Delete