Skip to main content

என்னுரை-ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

என்னுரை

அரவிந்த் வடசேரி

ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்பிற்கான 'என்னுரை'

இது நான் முற்றிலும் எதிர்பாராத நிகழ்வு. ஓரிரு ஆண்டுகளுக்கு முன், என் பெயர் தாங்கி இப்படி ஒரு நூல் வெளிவரும் என்று யாராவது ஆரூடம் சொல்லியிருந்தால் நான் நகைத்துக் கடந்திருப்பேன். எனக்குப் பிடித்த கவிதைகளையும் துணுக்குச் செய்திகளையும் மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் மொழிமாற்றம் செய்து முகநூலில் பதிந்து கொண்டிருந்தேன். எனினும் அதுவோர் இலக்கியச் செயல்பாடு எனும் எண்ணம் ஏதும் இருந்ததில்லை. நான் வாசித்து மகிழ்ந்தவைகளை நட்புகளுடன் பகிர்ந்து மகிழ்வித்தல் என்பதாகத் தான் எண்ணம் கொண்டிருந்தேன். மொழிபெயர்ப்பின் இலக்கிய சாத்தியங்கள் குறித்து போதுமான விழிப்புணர்வற்றவனாகவே இருந்திருக்கிறேன் என்பதை இப்போது தான் அறிகிறேன்.

       இப்பதிப்பின் வெளியீட்டாளர் எழுத்தாளர் சுதேசமித்திரன் தான் சிறுகதைகளை மொழிமாற்றம் செய்து ஆவநாழியில் வெளியிடலாம் எனும் யோசனையை முன்வைத்தார். அதற்கான முயற்சியில் ஈடுபட்ட பொழுதும்கூட நான் வாசித்து மகிழ்ந்த எழுத்தாளர்களின் கதைகளில் என்னை மிகவும் கவர்ந்தவற்றைத் தான் மொழிமாற்றம் செய்து கொடுத்தேன். அந்நேரமும் கூட இவற்றையெல்லாம் தொகுத்து வெளியிடலாம் எனும் எண்ணமோ ஆசையோ நான் கொண்டதில்லை. ஆனால் மீண்டும் சுதேசமித்திரனின் முழு முயற்சியில் தான் இத்தொகுப்பு வெளியாகிறது. மிக்க நன்றி நண்பரே உங்களுக்கும் ‘தரு’ விற்கும்.

       தங்களது கதைகளின் மொழிமாற்றத்தினை வெளியிட மனமுவந்து அனுமதியளித்த மூல எழுத்தாளர்களுக்கு மனம் கனிந்த நன்றி.

       தொகுப்பாக வெளியிடலாம் என்று சொன்ன ஓரிரு நாட்களிலேயே வடிவமைத்து PDF அனுப்பிவைத்த உடனேயே ’வாருங்கள், பிரிண்ட் போட்டு வரலாம்’ என அழைத்துச் சென்றார் பதிப்பாளர் சுதேசமித்திரன். பிரிண்ட் போட்ட கையோடு நாஞ்சில் நாடன் ஐயாவின் இல்லத்திற்குச் சென்று முன்னுரை வேண்டி கொடுத்தோம். ஐயா அவர்களும் ஒரு சிறப்பான முன்னுரையினை எழுதித் தந்துள்ளார். அவருக்கு என் பணிவான நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

       ஆவநாழியில் கதைகள் வெளிவந்தபோது ஓவியங்கள் வரைந்து மகிமைப்படுத்திய ஓவியர்கள் திரு.ஜீவா, திரு.ஜோசப், திரு.ரகு ஆகியவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.

       வாசித்து வாழ்த்தி வழிநடத்திய வாசகர்களுக்கும் நட்புகளுக்கும் சுற்றத்தாருக்கும் என் நன்றி.

அரவிந்த் வடசேரி
கோவைப்புதூர்
06.04.2023

புத்தகம் வாங்க தொடர்பு எண் : 9940937599

Comments

Post a Comment

Please leave a Comment
கருத்துக்கள் வரவேற்கிறேன்

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல் “எல்லாரும் போறாங்கப்பா… நான் அவ்ளவு பிராக்டீஸ் பண்ணியாச்சு. ரொம்ப பாதுகாப்பான எடம்தான்” என்று சாதனா சொன்னாள். விறகு வெடிக்க எரிந்து கணப்பு ஓசையிட்டது. எஞ்சிய டீயை குடித்துக்கொண்டு கோப்பையை கீழே வைத்துவிட்டு ராகவன் “எந்த ஊர்னு சொன்னே?” என்றார். “இன்வெர்நெஸ்” என்றாள் சாதனா. ராகவன் தன் செல்பேசியை எடுத்து அந்த இடம் எது என்று பார்த்தார். நெஸ் ஆற்றின் அழிமுகம். முழுமையாகவே உறைந்து பனிப்பாளப் பரப்பாக ஆகிவிட்டிருப்பதுதான் நெஸ் ஆறு. அந்த பனித்தரைக்குள் அது மௌனமாக, ரகசியமாக கடலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் அப்பெயரை அதற்கு முன் கேட்டிருக்கவில்லை. ஆகவே அது ஒரு செயல் என்று நினைத்தாள். “அப்டின்னா என்னது? ரொம்பக் குளிரா இருக்கிறதச் சொல்றாங்களா?” என்று கேட்டாள். அவள் அடைந்த குழப்பத்தை உடனே சாதனா புரிந்துகொண்டாள். வழக்கம்போல பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துவிட்டு, அவளுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டி கொஞ்சி, “சோ க்யூட்” என்ற பின் “அது ஒரு ஊர்மா” என்றாள். “அதான் எந்த ஊருன்னு கேட்டேன்” “இன்வெர்னெஸ்னா நீ என்னமோ கைன்ட்நெஸ், கிய...

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம் அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை. 1. நான் யார்? ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு, மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று. பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம், கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும் நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக...

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

டச் ஸ்க்ரீன் அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம் மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி தழும்பேறிய விரலாக இருந்தும் எவ்வளவு அழுத்தினாலும் வேலை செய்யவில்லை. "டச் ஸ்க்ரீன் டாடி, மெதுவாக அழுத்தினால் போதும் அழுத்தக்கூட வேண்டாம் சும்மா தொட்டால் போதும். உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்- இதோ இப்படி." அவன் விரல் தண்ணீரின் மேல் இயேசுவைப் போல நகர்ந்தது. ஆசைப்படி இயங்குகிறது உலகம். உலகம் வசப்படாதிருந்ததன் காரணம் இது தானோ? நான் தேவைக்குமேல் பலம் பிரயோகித்திருந்தேனோ? என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை நான் விரும்பியவற்றை விரும்புவது கண்டு வீணாக வருத்தப்பட்டேன். எதிரிகளுக்கெல்லாம் ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய் என இறைவனிடம் வருத்தப்பட்டேன். மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர என்னால் முடியவில்லை. முதல் அடியிலேயே நான் நீரில் மூழ்கிவிட்டேன். பூக்கள் மலர்வது யாராவது பலம் பிரயோகிப்பதாலா? நான் மட்டும் பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல ஓசையுடன் மலர்ந்தேன். நெற்றிவியர்வையை அதிகமாக கொதிக்கவிட்டு அப்பம் வேகவைத்தேன். அதுவோ ஐயாயிரம் போகட்டும் ஐந்து கூட தேறவில்...